காந்தியை கொண்டவன் (RSS) தேச பக்தனாம்! விடுதலை வாங்கி தந்தவன் தீவரவாதியாம்!.., குஜராத்தில் 2002ல் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த படுகொலையில் 3000பேரை கொண்டான் நரபலி நரேந்திர மோடி அவனை என்ன செய்வது அனைத்து ஆதாரம் இருந்து அவனை ஒன்றும் செய்யவில்லை? மீடியா மற்றும் இந்திய சட்டம்!

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, May 16, 2012

ஐபாட் ஐபேட் உலகின் முடிசூட மன்னன் வெண் திரையில்!

கம்ப்யூட்டர் உலகில் மட்டுமின்றி ஐபாட், ஐபேட் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.

இவர் கடுமையான உழைப்பாளியாக இருந்தது மட்டுமின்றி புதுமையான சிந்தனைகளை கொண்டவராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி புற்றுநோயால் இறந்து போனார்.

இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து புத்தகம் வெளிவந்திருக்கிறது. ஆனால் இவரைப்பற்றி எந்த ஒரு சினிமாவும் வெளிவந்ததில்லை. தற்போது ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு ஹாலிவுட்டில் படமாக்கப்பட இருக்கிறது.

'ஸ்டீவ் ஜாப்ஸ்' என்ற பெயரில் கடந்த 2011-ம் ஆண்டு வால்டர் ஐசக்சன் என்பவர், ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டார். இப்புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த ஹாலிவுட் படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தை சோனி பிக்சர்ஸ் எண்டெர்டெயிண்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தினை ஆஸ்கார் விருதுபெற்ற திரைக்கதையாசிரியரான ஆரோன் சோர்க்கின் எழுதி இயக்குவார் எனத் தெரிகிறது.

இவர் கடந்த ஆண்டு வெளியான 'தி சோஷியல் நெட்வொர்க்' என்ற ஆங்கில படத்திற்கு திரைக்கதை எழுதியமைக்காக ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி 2012-ம் ஆண்டு 'மணிபால்' என்ற ஆங்கிலப்படத்திற்கு திரைக்கதை எழுதியமைக்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Reactions:

0 comments:

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!